Thursday 22 November 2018

காணாமல் போன திருவிழா



மாவளித்திருவிழா😍


எங்களுக்கு இந்த பட்டாசு வாங்க எல்லாம் காசு கிடையாது. நாளு பேர் ஓன்னு சேர்வோம். ஒருத்தன் பனை மரம் ஏறுவோம். தேவையான பனை புடக்கை, கோணி பைல கொண்டுவருவோம்.






குழிநோண்டுவோம். பணை புடக்கை இருக்கும் அளவுக்கு நாளு, ஐஞ்சி குழியா தோன்டி பணை புடக்கைய போட்டு மண்ணெண்ணெய்ய ஊத்தி வேக வைப்போம்.


பிறகு நல்லா மொரத்தால விசுருவோம், புகை நிறைய வரும் கொளுந்து விட்டு எரியும் கொஞ்சம் நேரம் பிறகு எரிஞ்சதும் அது மேல மண்ணை அள்ளி போட்டு மூடுவோம்.


ஒரு அரை மணி நேரம் அமைதி காப்போம். பின்பு சூடு தெளிந்த பின் ஓரு கல்ல எடுத்து ஓவ்வொன்னா போட்டு அரைப்போம், அதுல உப்பு கொஞ்சம் போட்டு அரைப்போம்.


அரைச்ச பிறகு தாத்தாவோட பழைய வேட்டி அப்பாவோட பழைய லுங்கிய தூக்கிட்டு வந்து கிழிச்சி பெருசா கொட்டுவோம். பிறகு ஏரி,குளத்துக்கு போய்டு அங்க இருக்குற கொம்ப நல்லா தடியா இருக்குறதா பாத்து ஒரு மாவோளிக்கு 3 கொம்பு விதம் தேவையான கொம்புகளை வெட்டி எடுத்து வருவோம்.


பின்பு வீட்டுல இருக்குற கயிர எடுத்து நல்லா இறுக்கி கட்டி வச்சி, நிலா வந்ததும் அடுப்புல இருக்குற நெருப்ப அது மேல போட்டு உப்பு கொஞ்சம் நிறையவே போட்டு, உந்து பெரிசா நெருப்பு வருதா, எந்து வருதான்னு பாக்க தலைக்கு மேல வேகமா "மாவோளோ மாவளுன்னு" சுத்தி விடும்வோம் பாரு அது தான் எங்களுக்கு சந்தோசம்! செமயா இருக்கும்!!


அது ஒரு காலம்😍

No comments:

Post a Comment