Showing posts with label TAMIL CULTURE. Show all posts
Showing posts with label TAMIL CULTURE. Show all posts

Monday, 11 February 2019

Atthichudi | ஆத்திசூடி



Atthichudi | ஆத்திசூடி





நூல்[தொகு]

ஆசிரியர்: ஔவையார்

பாடல்கள்: 109

இலக்கணம்: காப்புச் செய்யுள் -1

கடவுள் வாழ்த்து[தொகு]

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய


தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.





உயிர் வருக்கம்[தொகு]





1.அறம் செய விரும்பு


அறம் – ( விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல்- நல்ல செயல்களை செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது ) செய – செய்வதற்கு,

விரும்பு -நீ ஆசைப்படு.

தருமம் செய்ய நீ விரும்புவாயாக

நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.





2. ஆறுவது சினம்


ஆறுவது- தவிர்க்க வேண்டியது,

சினம் – கோபம்.

கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது அல்ல.





3. இயல்வது கரவேல்


இயல்வது – நம்மால் முடிந்ததை கொடுப்பதற்கு

கரவேல் – வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( “கரவல்” கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.





4. ஈவது விலக்கேல்


ஈவது – தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை

விலக்கேல் – நீ தடுக்காதே

ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே





5.உடையது விளம்பேல்


உடையது – உனக்கு உள்ள பொருளை

விளம்பேல் – நீ பிறர் அறியும்படி சொல்லாதே

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி பெருமையாக பேசாதே.

உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.





6. ஊக்கமது கைவிடேல்


ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியை

கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.

எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.





7. எண் எழுத்து இகழேல்


எண் – கணித நூலையும்

எழுத்து – அற நூல்களையும், இலக்கண நூலையும்

எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.





8. ஏற்பது இகழ்ச்சி


ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.

இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.





9. ஐயம் இட்டு உண்


ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து

உண் – பிறகே நீ உண்ண வேண்டும்.

யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.





10. ஒப்புரவு ஒழுகு


ஒப்புரவு – உலக போக்கிற்கு எற்றவாறு;

ஒழுகு – நட

உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.





11. ஓதுவது ஒழியேல்


நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.





12. ஔவியம் பேசேல்


ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.





13.அஃகஞ் சுருக்கேல்


அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்[தொகு]





14.கண்டொன்று சொல்லேல்.


கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.





15.ஙப் போல் வளை.


‘ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ

அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

“ங” என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு.


சனி(குளிர்ந்த) நீராடு.





17.ஞயம்பட உரை.


கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18.இடம்பட வீடு எடேல்.


உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு.


ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண்.


உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல்.


ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய்.


எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல்.


பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)

நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல்.


நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25.அரவம் ஆட்டேல்.


பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்.


‘இலவம் பஞ்சு’ எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27.வஞ்சகம் பேசேல்.


கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே

28.அழகு அலாதன செய்யேல்.


இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்.


இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல்.


கடவுளை (அறன் = சிவபெருமானை) மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்

31.அனந்தல் ஆடேல்.


மிகுதியாக தூங்காதே

ககர வருக்கம்[தொகு]

32.கடிவது மற


யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்


தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)

பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்


உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

35. கீழ்மை யகற்று


இழிவான குணஞ் செயல்களை நீக்கு

36. குணமது கைவிடேல்


நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்


நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே

38. கெடுப்ப தொழி


பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்


கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்

40. கைவினை கரவேல்


உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்


பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி


குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

43.கௌவை அகற்று


வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்[தொகு]

44. சக்கர நெறி நில்


தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

45.சான்றோ ரினத்திரு


அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்


பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே

47. சீர்மை மறவேல்


புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்


கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்

49. சூது விரும்பேல்


ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்


செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

51.சேரிடமறிந்து சேர்


நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்


பெரியோர் ‘சீ’ என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

53. சொற்சோர்வு படேல்


பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

54. சோம்பித் திரியேல்


முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்[தொகு]

55. தக்கோ னெனத்திரி


பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. தானமது விரும்பு


யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்


நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்

58. தீவினை யகற்று


பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்


முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்


ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்

61. தெய்வ மிகழேல்


கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்


உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. தையல்சொல் கேளேல்


மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்


பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)

65. தோற்பன தொடரேல்


ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

நகர வருக்கம்[தொகு]

66. நன்மை கடைப்பிடி


நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

67. நாடொப் பனசெய்


நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்

68. நிலையிற் பிரியேல்


உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர்விளை யாடேல்


வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதே

70. நுண்மை நுகரேல்


நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

71. நூல்பல கல்


அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

72.நெற்பயிர் விளை


நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுகு


ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

74. நைவினை நணுகேல்


பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

75. நொய்ய வுரையேல்


பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்


மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்[தொகு]

77. பழிப்பன பகரேல்


பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்


பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்


குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்


பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்


உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்

82. பூமி திருத்தியுண்


விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்

83. பெரியாரைத் துணைக்கொள்


அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

84. பேதைமை யகற்று


அறியாமையைப் போக்கு

85. பையலோ டிணங்கேல்


அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்


பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்


யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே

மகர வருக்கம்[தொகு]

88. மனந்தடு மாறேல்


எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

89. மாற்றானுக் கிடங்கொடேல்


பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்


சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்


மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்


எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

93. மூர்க்கரோ டிணங்கேல்


மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

94. மெல்லினல்லாள் தோள்சேர்


பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்


நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்


விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

97. மொழிவ தறமொழி


சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

98.மோகத்தை முனி


நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

வகர வருக்கம்[தொகு]

99. வல்லமை பேசேல்


உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாதுமுற் கூறேல்


பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே

101. வித்தை விரும்பு


கல்வியாகிய நற்பொருளை விரும்பு

102. வீடு பெறநில்


முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து

103. உத்தமனாய் இரு


உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. ஊருடன் கூடிவாழ்


ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

105. வெட்டெனப் பேசேல்


யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே

106. வேண்டி வினைசெயேல்


வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

107. வைகறை துயிலெழு


நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்


பகைவர்களை நம்பாதே

109. ஓரஞ் சொல்லேல்


எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.





Friday, 1 February 2019

தமிழ் புத்தாண்டு எப்போது:


அவரவர் பின்பற்றப்படும்  மாதங்கள் 👇👇👇

ஆங்கிலேயர்களுக்கு

1. சனவரி
2. பிப்ரவரி
3 . மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. சூன்
7. சூலை
8. ஆகத்து
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. திசம்பர்

வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு

1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி

 தமிழர்களுக்கு

1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி )
3. மீனம் ( பங்குனி)
4. மேழம் ( சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி )
10. துலை (ஐப்பசி )
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.

எனவே தமிழர்களுக்கு தை திருநாளே தமிழ் புத்தாண்டு .

Tuesday, 18 December 2018

வைகுண்ட ஏகாதசி


💐💐💐 வரலாறு💐💐💐







வைகுண்ட ஏகாதசி 💐💐

**************************




பரமபதம் -> சொர்க்க வாயில்

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் திசம்பர்-சனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.

சமய நம்பிக்கை

**********************

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நாலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.

புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருட்டிணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.

திருவரங்கத்தில்

***********************

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது.

ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

திருமலையில்

********************

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது. எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்.

Friday, 14 December 2018

Moothurai



மூதுரை - ஔவை - 3










வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது

பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும்,

பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும்

கிடைக்கும்




1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.

பொருள்: ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும்,

நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது.

எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது

வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து

விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய

விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.




2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர்மேல் எழுத்துக்கு நேர்

பொருள்: நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல்

எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும்

வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது

இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது.

அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி

நிலைக்காது போகும்.




3. இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத

நாளல்லா நாள் பூத்தநன் மலரும் போலுமே

ஆளில்லா மங்கையர்க்கு அழகு

பொருள்: இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும்

பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது

பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப்

போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.




4. அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்

பொருள்: நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்

நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும்

நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு

எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது.

தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்

போன்றது அவர் நட்பு.




5. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா

பொருள்: கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில்

மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும்

நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன்

தரும்.




6. உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்

பொருள்: கல் தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால்

உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது

போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும்

தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.




7. நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம்

பொருள்: அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ

அவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு.

முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது

அனுபவிக்கும் செல்வம். குணம் நாம் தோன்றிய குலத்தின்

அளவே.




8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.

பொருள்: நல்லவர்களைக் காண்பதும், நமக்கு நன்மை பயக்கும்

அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை

மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும்

நல்லது.




9. தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது

பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்

கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில்

சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக்

கெடுதியே.




10. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

பொருள்: உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும்

புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான

உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்)

எல்லாருக்குமே பயனைத் தரும்.




11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி

ஏற்றம் கருமம் செயல்

பொருள்: நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே

ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. அது போலவே

பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர்

துணையின்றி முடிவதில்லை.




12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது

மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகிவிடும்

பொருள்: தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம்

தருவதில்லை. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல

வாசனையைத் தருகிறது. பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூட

உதவுவதில்லை, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று

குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது. எனவே உருவத்தை வைத்து

ஒருவரை எடை போடக் கூடாது.




13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம்

பொருள்: கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை

மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில்

எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை

அறியாதவனுமே மரம் போன்றவன்.




14. கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி

தானும் அதுவாக பாவித்துத் - தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்

கல்லாதான் கற்ற கவி

பொருள்: காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே

தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத

சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன்

சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை. விஷயமும்

இல்லை.




15. வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்க ஆகாரம் ஆனாற்போல பாங்கு அறியா

புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம்

பொருள்: புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும்

வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப்

போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும்

உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த

உதவியும் நம்மையே உடன் அழித்து விடும்.




16. அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடியிருக்குமாம் கொக்கு

பொருள்: நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக்

கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக்

கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை.

அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும். அதைக் கண்டு

அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.




17. அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு

பொருள்: குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும்

பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு

விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். அந்தக் குளத்திலேயே

அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல்

கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து

கொள்பவர்களே நம் உறவு.




18. சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று

அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக் கால்?

பொருள்: தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன்

சிதறலும் தங்கமே. ஆனால் மண்பானை உடைந்து போனால்?

அதைப் போன்றதே சிறந்த பண்புடையவர்களுக்கும்,

மற்றவர்களுக்கும் உண்டாகும் தாழ்வும்.




19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நானாழி - தோழி

நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்

விதியின் பயனே பயன்.

பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே

முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை

முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக்

கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் முன்

ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.




20. உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா

உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்

அம் மருந்து போல் வாரும் உண்டு.

பொருள்: வ்யாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று

விடுகிறது. எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு

என்று நினைக்க முடியாது. உடன் பிறக்காது எங்கோ பெரிய

மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல,

அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.




21. இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்

புலி கிடந்த தூறாய் விடும்.

பொருள்: நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த

இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ஆனால் அந்த

இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து

விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ

அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.




22. எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்

கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முற்பவத்தில் செய்த வினை.

பொருள்: மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம்

சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன்

வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக்

கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?




23. கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்

பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து

நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே

சீர் ஒழுகு சான்றோர் சினம்.

பொருள்: சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட

கல்லைப் போலப் பிரிந்து விடுவர். பெரும் சினத்தால் பிரிந்தாலும்

பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர்.

அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான

வடுவைப் போன்றதே.




24. நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்.

பொருள்: குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை

சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர்.

சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி

அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்




25. நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்

அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர்.

பொருள்: தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து

வாழும். விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும்

வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில்

குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர்,

குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து

கொண்டிருப்பர்.




26. மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத்

தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

பொருள்: ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக்

கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன்

தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால்

கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.




27. கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்

அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய

வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

பொருள்: கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத்

தரும். தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு

அதன் கன்று அழிவைத் தரும். வாழ்க்கைக்குப் பொருந்தி

நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.




28. சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்

கந்தம் குறை படாது; ஆதலால் - தம்தம்

தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று?

பொருள்: தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம்

குறைவதில்லை. அதைப் போலவே தாராள குணம் படைத்த

அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம்

மாறுவதில்லை.




29. மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல

உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை

ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து

போம் போது அவளோடும் போம்.

பொருள்: ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும்,

அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப்

பெருமையும் லக்ஷ்மி கடாக்ஷம் ஒருவனுக்கு இருக்கும் வரையில்

தான். அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும்.




30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.

பொருள்: தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும்

மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு

செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.









Moothurai - Auvaiyaar




மூதுரை








நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை - மூதுரை - ஔவையார்




விளக்கம்



உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்




Transliteration



Nellukku iraiththa neer vaaikkaal vazhi odip

pullukkum aangey posiyumam thol ulagil

nallaar oruvar ularel avar poruttu

ellaarkkum peyyum mazai - Moodhurai - Auvaiyaar.





English Translation



The water that is irrigated to the paddy runs along the canal and benefits the grass that grows along the bank. Similarly, when it rains for the good-hearted, everybody reaps the benefit.




Credits to Great Poet - Auvaiyaar

Achcham Thavir- Subramanya Bharathiyaar


Achcham Thavir

(1)அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு

keep fear away, strike hard (the evil) ,
value (revere) honor, practice rightful anger,

(2)ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல் சூரரைப் போற்று தீயோர்க்கஞ்சேல்


don’t loose you manliness, never compromise on your dignity,
shower praise on talented/skilled people, don’t be afraid of evil people,


(3)ஓய்தல் ஒழி நேர்படப் பேசு தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்


eliminate rest (don’t slack), talk straight,
never compromise on your dignity, don’t fear death,
don’t waste time, don’t be afraid of unethical/wrong people,
learn the art of warfare, in the event of failure don’t breakdown,


5)புதியன விரும்பு வீரியம் பெருக்கு கெடுப்பது சோர்வு தொன்மைக்கஞ்சேல்


embrace (love) new things, increase your power ( strength, virility),
lethargy always spoils, don’t be afraid of the antiquity (do not be afraid to break the status quo and come up with new pathbreaking ideas),


(6)வெளிப்படப் பேசு நன்று கருது வவ்வுதல் நீக்கு தவத்தினை நிதம் புரி


speak with openness and clarity, think good,
eliminate greed and desire for materialistic pleasures; forever, practice (or complete the) penance (meditation),


(7)கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று சேர்க்கை அழியேல் பேய்களுக்கஞ்சேல்


practice what you learn, revere skilled handicraft,
Being united never fails, don’t be afraid of ghosts,


(8)ஞாயிறு போற்று மந்திரம் வலிமை சௌரியந் தவறேல் நாளெல்லாம் வினைசெய் நாளெல்லாம் வினைசெய்


revere the sun, mantras are potent (so chant them),
Never loose valor, do good deeds, always do good deeds,




Credits to Great Poet - Subramanya Bharathiyaar

Thursday, 22 November 2018

காணாமல் போன திருவிழா



மாவளித்திருவிழா😍


எங்களுக்கு இந்த பட்டாசு வாங்க எல்லாம் காசு கிடையாது. நாளு பேர் ஓன்னு சேர்வோம். ஒருத்தன் பனை மரம் ஏறுவோம். தேவையான பனை புடக்கை, கோணி பைல கொண்டுவருவோம்.






குழிநோண்டுவோம். பணை புடக்கை இருக்கும் அளவுக்கு நாளு, ஐஞ்சி குழியா தோன்டி பணை புடக்கைய போட்டு மண்ணெண்ணெய்ய ஊத்தி வேக வைப்போம்.


பிறகு நல்லா மொரத்தால விசுருவோம், புகை நிறைய வரும் கொளுந்து விட்டு எரியும் கொஞ்சம் நேரம் பிறகு எரிஞ்சதும் அது மேல மண்ணை அள்ளி போட்டு மூடுவோம்.


ஒரு அரை மணி நேரம் அமைதி காப்போம். பின்பு சூடு தெளிந்த பின் ஓரு கல்ல எடுத்து ஓவ்வொன்னா போட்டு அரைப்போம், அதுல உப்பு கொஞ்சம் போட்டு அரைப்போம்.


அரைச்ச பிறகு தாத்தாவோட பழைய வேட்டி அப்பாவோட பழைய லுங்கிய தூக்கிட்டு வந்து கிழிச்சி பெருசா கொட்டுவோம். பிறகு ஏரி,குளத்துக்கு போய்டு அங்க இருக்குற கொம்ப நல்லா தடியா இருக்குறதா பாத்து ஒரு மாவோளிக்கு 3 கொம்பு விதம் தேவையான கொம்புகளை வெட்டி எடுத்து வருவோம்.


பின்பு வீட்டுல இருக்குற கயிர எடுத்து நல்லா இறுக்கி கட்டி வச்சி, நிலா வந்ததும் அடுப்புல இருக்குற நெருப்ப அது மேல போட்டு உப்பு கொஞ்சம் நிறையவே போட்டு, உந்து பெரிசா நெருப்பு வருதா, எந்து வருதான்னு பாக்க தலைக்கு மேல வேகமா "மாவோளோ மாவளுன்னு" சுத்தி விடும்வோம் பாரு அது தான் எங்களுக்கு சந்தோசம்! செமயா இருக்கும்!!


அது ஒரு காலம்😍

Wednesday, 5 September 2018

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்



பாயின் மருத்துவ குணங்கள்



இயற்கை மறந்தோம் இன்னல் படுகிறோம் நினைவில் வைப்போம் முயற்சியும் செய்வோம்.....

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும். பாய்களில் இருக்கு பல்வேறு இயற்கை மருத்துவ குணங்கள் அறிவோம்...







பெரும்பாலான வீடுகளில் நாம் தரையில் விரிப்பதற்கு நெகிழிப் பாய்(பிளாஸ்டிக்)கலேயே பயன்படுத்துகிறோம். இப்போது ஆதிக்கம் செலுத்திவரும் நெகிழிப் பாய்களை, குளிர் காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றை பயன்படுத்துவதால் எவ்வித மருத்துவக் குணங்களும் இல்லை.வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதித்து பல்வேறு தீமைகளை நமது உடலுக்கு இழைக்கின்றன.


தாவரங்களில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித மருத்துவ குணங்களையும் கொண்டவையாக இருக்கின்றன. ஒற்றை விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையாகும்.


ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் :


கோரைப்பாய்


கோரைப்பாயில் தூங்கினால் உடல்சூடு, மந்தம், விஷசுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் உறக்கமும் தரும்.


கம்பளி விரிப்பு


கம்பளி விரிப்பை பயன்படுத்தினால் கடும் குளிருக்கு, சூட்டை தந்து குளிர் சுரத்தை போக்கும்.


பிரப்பம்பாய்


பிரம்பம்பாயில் படுத்தால் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் ஆகியவை நீங்கி நலம் கொடுக்கும்.


ஈச்சம்பாய்


ஈச்சம்பாயில் படுத்து தூங்கினால் வாதநோய் குணமாகும்.ஆனால் உடலில் சூட்டை ஏற்படுத்தி, கபத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.


மூங்கில்பாய்


மூங்கில்பாய் என்பது மூங்கில் கழிகளை மெல்லிய குச்சிகளாக உருவாக்கி அதன் மூலம் தடுக்கை போன்ற பாயை தயார் செய்வது ஆகும். இதில் படுத்தால், உடல் சூடும் பித்தமும் அதிகாரிக்கும். அதனால் பெரும்பாலும் மறைப்பாக தொங்கவிடும் இடத்திற்கு இதை பயன்படுத்துவார்கள்.ww


தாழம்பாய்


தாழம்பாயில் படுத்துறங்கினால் வாந்தி, தலை சுற்றல், அனைத்து வகை பித்தமும் படிப்படியாக போகும்.


பனையோலை பாய்


பனையோலை பாயில் படுப்பது, பித்தத்தை போக்கி உடல் சூட்டை நீக்கி சுகத்தை தரும்.


தென்னம் ஓலையால் செய்யப்படும் கீற்றில் படுத்துறங்குவது உடலின் சூட்டை சமன்படுத்தி அறிவுத் தெளிவை தரும்.


ரத்தினக் கம்பளமானது, ஆபத்தான கிருமிகளால் எற்படும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது


Wednesday, 18 July 2018

Ulaganeethi -Never spend a day without learning


உலகநாதர் இயற்றிய உலகநீதி

பாடல் : 1


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்


கல்வி பயிலாமல், கற்றதை மனனப்பயிற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.
பிறர்மீது பழி கூறக்கூடாது. அம்மாவை மறக்கக்கூடாது. தீயவர்களோடு சேரக்கூடாது. தகாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை கூறக்கூடாது.வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, வலிமை பெற்ற முருகப் பெருமானை போற்றுவாய் மனமே.


English Translation


Never spend a day without learning.
Do not speak ill of others.
Do not ever forget your mother.
Do not befriend devious people.
Do not visit places if ill-repute.
Do not slander one to his back.
Praise the God who has Valli as his consort
and peacock as his mount.


பாடல் : 2


நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்


தெரிந்தே பொய் கூறக்கூடாது. நடக்காது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்த முயலக் கூடாது. பாம்போடு விளையாடக்கூடாது. பண்பு இல்லாரோடு பழகக்கூடாது. தனியாக ஒருவரும் இல்லாத வழியில் செல்லக் கூடாது. பிறர் கெடுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. மனமே! மலைநாட்டின் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.



English Translation

Do not utter lies knowingly.
Do not establish transient actions.
Do not associate with people of poisonous mind
Do not befriend people with different ideals.
Do not venture alone into lonely places
Do not cause other’s downfall
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 3


மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


விளக்கம்


மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது. பகைவனை உறவென்று கொள்ளக் கூடாது. பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது. தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது. துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது. கோபத்தோடு இருப்பவரிடம் செல்லக்கூடாது. மனமே! காட்டில் விலங்குகளைத் தேடித் திரிகின்ற குறவர் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.



English Translation

Do not give in to your desires
Do not trust a stranger as a relative.
Do not bury your wealth without enjoying its fruits.
Do not forget to perform charity.
Do not attract trouble by being angry.
Do not visit those cannot control anger
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 4

குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


விளக்கம்


பிறரிடம் எப்போதும் குற்றங்களையேப் பார்க்கக் கூடாது. கொலை, திருட்டு செய்பவரோடு சேரக்கூடாது. படித்தவர்களை இகழக்கூடாது. பிறன் மனைவியை நினைக்கக் கூடாது. ஆட்சிசெய்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது. மனமே! வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, நிகரில்லாத முருகப் பெருமானை போற்றுவாய்.


English Translation


Do not always criticize others.
Do not associate with robbers and murderers.
Do not degrade the learned.
Do not lust after chaste women.
Do not antagonise those in power.
Do not live in areas that lack a place of worship.
Praise the God who has Valli as his consort
and peacock as his mount.


பாடல் : 5


வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்

மனையாளோடு வாழாமல் பிறபெண்களைத் தேடி அலையக் கூடாது. மனைவியைக் குறை கூறக்கூடாது. தீய பழக்கங்களில் விழுந்து விடக் கூடாது. கடும்போரில் பின்வாங்கி ஓடக்கூடாது. கீழானவர்களோடு சேரக்கூடாது. அவர்களைக் குறை கூறக் கூடாது. மனமே! பெருவாழ்வு வாழும் குறவர் மகளான வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.


English Translation


Do not abandon the woman you married
Do not castigate your wife.
Do not commit sinful act
Do not turn tail in a battle field.
Do not join with people of low ideals.
Do not insult those fallen on hard times.
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 6


வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே



விளக்கம்


பிறரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர் பேச்சைக் கேட்க வேண்டாம். நம்மை மதிக்காவர்கள் இல்லத்திற்கு செல்லக் கூடாது. அனுபவஸ்தர்களான பெரியோரின் அறிவுரைகளை மறக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவரோடு சேரக் கூடாது. கல்வியறிவு தந்த ஆசிரியர் சம்பளத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது. திருடர்களோடு கூட்டு சேரக்கூடாது. மனமே! வல்லமையால் புகழ் சேர்த்த வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.



English Translation


Do not follow those who are foul mouthed
Do not visit the home of those who do not value you
Do not forget the advice of the elderly.
Do not associate with those with short temper
Do not hold back your teacher’s due
Do not associate with robbers.
Praise the God who has Valli as his consort
And holds the spear in his hands


பாடல் : 6


கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.


விளக்கம்

எண்ணித் திட்டமிடாமல் கார்யங்களை செய்யக் கூடாது. நம் நஷ்டங்களை பிறரிடம் கூறக்கூடாது. போர்க்களத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது. புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடாது. இரண்டாம் மணம் புரியக் கூடாது. எளியார் என்று பகைமை கொள்ளக் கூடாது. நெஞ்சே! தினைப் புனம் காக்கும் ஏழைப் பங்காளன் குமரவேள் பாதத்தைப் போற்று.


English Translation

Investigate before engaging
Do not offer false account
Do not get involved in your eneny’s war
Do not live in an area of common ownership
Do not wish for two wives
Do not develop enmity with the weak.
Praise the feet of Lord Kumaravel,
Guardian of forest, saviour of the poor.


பாடல் : 7

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்


தகாத இடங்களுக்குப் போகக் கூடாது. ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது. எல்லாரையும் பற்றி கோள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நமக்கு வேண்டியவர்களை அலக்ஷ்யமாய்ப் பேசக்கூடாது. பெருமை தரும் கார்யங்களைத் தவிர்க்கக் கூடாது. கெட்ட செயல்களுக்குத் துணை போகக் கூடாது. நெஞ்சே! பெருமை பெற்ற குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.


English Translation

Do not befriend people not fit to be seen with.
Do not forget those who have helped you.
Do not go about telling tales
Do not ignore those who trust you
Do not abandon noble acts
Do not be a slave to those who cause trouble
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 8


மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்


நிலத்திலேயே வாழ்ந்து கொண்டு நிலத்தகராறில் ஒருசார்பாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது. மனம் சலித்து எவரோடும் சண்டை செய்யக் கூடாது. நம் துயரை எவரிடமும் அழுது தெரிவிக்கக் கூடாது. பார்க்காத ஒன்றைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்து கூறக்கூடாது. பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது. கோள் சொல்லிக்கொண்டு அலைபவரோடு சேரக்கூடாது. நெஞ்சே! உலகளந்த விஷ்ணுவின் தங்கையான உமையாளின் மைந்தன், மயிலேறும் நம் தலைவன் முருகப் பெருமானைப் போற்று.


English Translation

Do not condemn the land you are standing on.
Do not quarrel with everyone due to frustration.
Do not hurt others by losing kindness.
Do not bear false witness
Do not use words to hurt others
Do not associate with those who backbite
Praise the son of Uma who is the sister of Vishnu
The One who has peacock as his mount



பாடல் : 9

மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே


விளக்கம்


வீண்பேச்சு பேசி வலுச்சண்டை தேடுபவரோடு சேரக்கூடாது. பொய் சாக்ஷி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது. தெய்வத்தை மறக்கக்கூடாது. இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது. நம்மை ஏசிய உற்றாரிடம் உதவி கேட்கக்கூடாது. மனமே! குறி கூறும் குறவள்ளி மணவாளன், முருகப் பெருமான் நாமத்தைக் கூறுவாய்.


English Translation


Do not associate with immoral men.
Do not argue to maintain lies.
Do not threaten to show off your strength.
Do not forget the divine
Do not tell lies even when faced with death.
Do not visit relatives who don’t respect you.
He who has taken Kuraththi Valli as his consort
Speak his name of Kumaravel, Oh my heart!


பாடல் : 11

அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.


விளக்கம்

ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. வண்ணான், க்ஷவரத் தொழில் செய்பவன், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்யார், ப்ரஸவம் பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்திய மருத்துவன் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ?


English Translation

Do not deprive the wages of five groups of people
Listen, when I say who these groups are.
The wages of washer men and hairdresser.
The wages of the teacher who taught you all.
The wages of the midwife who cut the umbilical chord.
The wages of the physician who saved you from pain.
What kind of fate will they have to face
who don’t pay them with a pleasant word.


பாடல் : 12

கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


விளக்கம்

ஒரு குடும்பத்தைப் பிளவு செய்து கெடுக்கக் கூடாது. கண்ணில் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே வேலையாகக் கொள்ளக் கூடாது. தீயவர் நட்பு கூடாது. தெய்வத்தை இகழக்கூடாது. பெரியோரை வெறுக்கக் கூடாது. நெஞ்சே! குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.


English Translation


Do not cause separation of families
Do not take a flower that does not belong to you
Do not interfere with malicious intent
Do not befriend men of vicious nature
Do not belittle the almighty
Do not hate men of spiritual attainment
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 13 

ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந்தேடி
பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.


விளக்கம்

பலரைப் போற்றி, பலவகையில் பொருள் தேடிய உலகநாதனாகிய நான் கற்றகல்வியால், அருந்தமிழில் முருகனைப் பாட வேண்டி, அவன் திருவருளால் உலகநீதியை உண்மையாய்ப் பாடிவைத்தேன். இதனை விரும்பி, பொருள் தெரிந்து, நாள்தோறும் கற்றோரும், கேட்டோரும் பூலோகம் உள்ளளவும் களிப்போடும், புகழோடும் வாழ்வார்களாக.


English Translation


To praise Lord Arumugan in sacred Tamil verse
Ulakanathan who earned his wealth by fair means
Sang these verses on natural justice
with knowledge induced by the grace of God
Those who loved it, learnt it and listened to it
will live with happiness everyday.
They will gain wealth and adulation
As long as the earth exists.

Wednesday, 25 April 2018

Aathichudi with Tamil meaning



ஆத்திசூடி !! (Aathichudi!!)


அறம் செய விரும்பு
Aram Seiya Virumbu
Have desire to do good


ஆறுவது சினம்
Aaruvadhu Sinam
The one that reduces should be anger


இயல்வது கரவேல்
Iyalvadhu Karavel
Give what you don’t need.


ஈவது விலக்கேல்
Eevadhu Vilagel
Do not stop giving.


உடையது விளம்பேல்
Udaiyadhu Velambel
No Publicity.


ஊக்கமது கைவிடேல்
Ookamadhu Kaividale
Do not lose hope


எண், எழுத்து இகழேல்
Enn, Ezhuthu Igalel
Do not underestimate the power of Mathematics and literature


ஏற்பது இகழ்ச்சி
Yerpadhu Igazhchi
Receiving is meaner.


ஐயமிட்டு உண்
Iyamittu Unn
Eat after sharing.


ஒப்புர வொழுகு
Oppuravu Ozhugu
Get used to what you have. Get along with the world.


ஓதுவது ஒழியேல்
Odhuvadhu Ozhiyel
Never stop learning or preaching.

ஒள
ஒளவியம் பேசேல்
Oviyam Pesale
Do not talk ill about others.


ஃகஞ் சுருக்கேல்
Akanjurukale
Do not be stingy.

~ஔவையார்(Ovvaiyaar)


Thursday, 22 March 2018

All Tamil books in PDFs




Tamils Books:-



To All, This post is a great gift to you. All Tamil books are available in these PDF pages. Save these pages till your lifetime .



https://drive.google.com/open?id=1Up8ILGldamm9ppI_5eGcYiYXNtMKrAIS

வாழ்க்கை வரலாறுகள் தமிழ் மின்நூல்கள்


தமிழ் மின்நூல்கள்:


பெரியார்

https://t.co/q2VexzfDTP


கார்ல் மார்க்ஸ்

https://t.co/BbQwjgJFcq


சேகுவேரா

https://t.co/JI9eSrEDUE


தாமஸ் ஆல்வா எடிசன்

https://t.co/a6InSC0Da1


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

https://t.co/IWWUTSWna5


மேதகு வே.பிரபாகரன்

https://t.co/Zg5mtFiFE8


மாவீரன் அலெக்சாண்டர்

https://t.co/A2abcypbAv


மருதநாயகம்

https://t.co/gpeSWfN4R6


ராமானுஜம்

https://t.co/HgR7VZeYGI


சுனிதா வில்லியம்ஸ்

https://t.co/jkSAD1kMEL


ஹெலன் கெல்லர்

https://t.co/Jjw8SYd5XH


அறிஞர் அண்ணா

https://t.co/hanYh3Y2cS


திப்பு சுல்தான்

https://t.co/hMPzLcS68j


நெப்போலியன்

https://t.co/2CeBxGohU3


கேனல் கடாபி

https://t.co/W6aukGy6rs


ஹிட்லர்

https://t.co/qHpoaN6Z0A


காமராசர்

https://t.co/Y7A7LCmo1o


பாரதியார்

https://t.co/lVAC1Skenq


பிடல் காஸ்ட்ரோ

https://t.co/2fAuV7G33K


Tuesday, 25 April 2017

தமிழனின் சாதனை பட்டியல்கள்


நமது வரலாறு

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….

பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்..

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு!

கல்லணை :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை, இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?




மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா?




அங்கோர்வாட் கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.



திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால்கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை, கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.



கடல் நடுவே ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.



தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?




தொல்காப்பியமும்‪ திருக்குறளும்‬:-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கிலமொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?




அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவின் அணுவினை …அணுகவல்லார்க்குஅணுவின் அணுவினை அணுகலுமாமே”-ஆசான் திருமூலர்சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்.


சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே எனதமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியானதமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.




வானியல் அறிஞர்கள் :-

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.





பூம்புகார் உலகின் தொன்மையான நகரம் :-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதர நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.



உலகை கட்டி ஆண்ட தமிழன்:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித்தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே. அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமதுவரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்



நன்றி வணக்கம்.


Tuesday, 18 April 2017

ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்


அடியவனுக்கு இனியவளே


உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?




அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது விசிறு என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.

விசிற ஆரம்பித்து விட்டார்.

இப்படி,கணவருடன்
வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.

வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே
விட்டு விட்டு வந்தார்.
குடத்துடன் கூடிய அந்தக்கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே
மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!

அன்புடையவளே!

என் சொல்படி நடக்கத்
தவறாத பெண்ணே!

என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!

பின் தூங்கி முன் எழுபவளே!

பேதையே!

என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ!

என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை
மனதிற்குள்
அசைபோடுவார்களா..!!

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்.

யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ
அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள்.

அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும்  அறிவாளியாக  இருந்தால் 👍🙏😊 அதுவே கோவில்.


Monday, 3 April 2017

தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்



மாறுங்கள் மண்னின் மைந்தர்களே






ஏரியை அழித்து

கல்லூரி கட்டியாச்சு

குளத்தை அழிச்சு

கம்பெனி கட்டியாச்சு

வயக்காட்டை அழிச்சு

வீடு கட்டியாச்சு

தவறு எல்லாம்

மக்களாகிய நம்மீது தானே தவிர

அடுத்தவன் மீது இல்லை

துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு

இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு

நீர்வளத்தை

மணல்வளத்தை

காடுகளை

அழித்தபோது வேடிக்கை

பார்த்தது யாரு

உன்னால் இன்று

நெஞ்சை நிமிர்த்தி

நம்ம அரசியல்வாதியிடம்

நம்ம பிரச்சனையை

சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??

முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்

காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்

செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்

தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்

தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!

முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை

காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை

காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை

குளமேதும் வெட்டவில்லை

கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது

குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது

ஆனால்

விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை

தமிழக அரசே..

தமிழக தன்மான மக்களே

முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க

நதியை இணைக்க
சொல்லுங்க

இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க

மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா  ....??

 வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது

 இன்று

மாறுங்கள்  மண்னின் மைந்தர்களே ..

தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!

சூடும்,சொரைனையும்
நிறைக்கொண்டு வாழும் இனமே..

மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்  .

         வேதனையுடன்
          உங்களில்ஒருவன்...  தமிழன்💪💪


Saturday, 28 January 2017

Jallikattu Woah



Jallikattu Respect for Cattels.!!! 


This was not even a tamil tradition all this time!  hmmm......


In Ancient times, Two bullfighting and bull-racing sports were conducted. 1.Manjuvirattu and 2. Yeruthazhuval. These sports were organised to keep the people's temperament always fit and ready for the war at any time. Each has its own techniques and rules. These sports acted as one of the criteria to marry girls of warrior family. There were traditions where the winner would be chosen as bridegroom for their daughter or sister.


The ancient Tamil art of unarmed bullfighting, popular amongst warriors in the classical period, has also survived in parts of Tamil Nadu, notably Alanganallur near Madurai, where it is known as Jallikattu and is held once a year around the time of the Pongal festival.


Mr. Gandhirajan, who is a post-graduate in Art History from Madurai-Kamaraj University, said the ancient Tamil tradition was "manju virattu" (chasing bulls) or "eruthu kattuthal" (lassoing bulls) and it was never "jallikattu," that is baiting a bull or controlling it as the custom obtained today. In ancient Tamil country, during the harvest festival, decorated bulls would be let loose on the "peru vazhi" (highway) and the village youth would take pride in chasing them and outrunning them. Women, elders and children would watch the fun from the sidelines of the "peru vazhi" or streets. Nobody was injured in this. Or the village youth would take delight in lassoing the sprinting bulls with "vadam" (rope).

It was about 500 years ago, after the advent of the Nayak rule in Tamil Nadu with its Telugu rulers and chieftains, that this harmless bull-chasing sport metamorphosed into "jallikattu," said Mr. Gandhirajan.



Reference - wikipedia


Thursday, 26 January 2017

ஜல்லிகட்டு ., மெரினா உருக்கம்.....✏✏


மெரினா உருக்கம்


செத்த நேரம் கொடுத்திருந்தா 
சீமான்னேனு கையெடுத்து கும்பிட்டுருப்போம்
ஒத்த வார்த்தை கேட்டுருந்தா 
உசுரையே கட்டி வந்து போட்டுருப்போம்
அய்யாமாரே, அய்யாமாரே…

ஒங்க ஊட்டு புள்ளை மொகம் தெரியலியோ அடிக்கையிலே
கழுத்து மேல பூட்ச வச்சு தொண்டக்குழி மிதிக்கும் போது
காளை மாட்டு மேல வந்த கரிசனம் போல் துடிக்கலையோ

மச்சா ஒனக்கு கடைசி பொட்டலம்னு சகளை ஒருத்தன் குடுத்து போக
அய்யாமாரே பசில கெடக்கு நமக்கு நாலு வாய் தண்ணி போதும்னு
எடுத்து எடுத்து குடுத்தமங்கோ
தின்ன சோறு கொடலுக்குள்ளே செரிச்சி மலமா எறங்க குள்ள
எங்க குடல உறுவ வந்தே என்ன பாவம் செஞ்சமுங்கோ

ஆறு நாளு பழகிப்புட்டா நாயி கூட கால நக்கும்
சோறா தண்ணியா கெடந்தமெ, 
அம்புட்டும் அய்யாமாரே வேசமுங்களா

சேறு தண்ணி பாக்காம குப்பை கூளம் அள்ளி போட்டோம்
ராவா, பகலா பாக்காம ஒங்க வேளைய நாங்க செஞ்சோம்
கண்ண மூடி தெறக்ககுள்ள கலவரத்தை தூண்டிட்டியளே
மோரா, தயிரான்னு கடையற மாதிரி 
பொம்பளப்புள்ளக மானத்த உறுவி எரிஞ்சிட்டியளே 

பத்த வச்ச பரட்டையெல்லாம் கைய கொட்டி சிரிக்குதுக
வத்திக் குச்சிய தூக்கி போட வலது கையில துணிஞ்சிட்டிக

எதிரியல்லாம் மறஞ்சிப்போயி துரோகி கணக்கை குறிச்சிக்கிட்டோம்
போற பாதை எப்படியிருந்தாலும் 
அய்யாமாரு கண்ணுல படாம வாழ்ந்துக்கறோம்
பயமுன்னுதான் நெனைப்பியே, பாம்புக்கும் அப்படி நெனப்பிருந்துச்சாம்

காலுல விழுந்து கெஞ்சுனோம், கடலுல விழுந்து கெஞ்சுனோம்
கண்ணுல எரக்கத்த காட்டிட்டு. பல்லுல ரெத்தத்தை உறிஞ்சுப்புட்டியளே

கேட்டுக்க அய்யாமாரே கேட்டுக்க..
பெத்த புள்ளை தூங்கிருச்சான்னு கதவ தெறந்து நீ பாப்பே
மத்த புள்ள சாயலிலே செத்த புள்ளையா அது கெடக்கும் 
சோறு போட்ட கையை நெலத்துல ஓங்கி அடிச்சி 
ஒண்ண நிக்க வச்சி கேள்வி கேக்கும்
நம்பி வந்த அண்ணன்மார நாயப்போல அடிச்சிப்போட்டியேன்னனு
கழுத்துல ஏறி கணக்கு கேக்கும்
அப்ப வயித்துல அடிச்சிக்கிட்டு அழுவ 
எங்காத்தா வயிறு பிரசவ வலி ஒனக்கெடுக்கும்
எங்காத்தா மாருல வழிஞ்ச ரெத்தம் ஒன் கண்ணுல வழியும்…

நல்லாருங்க அய்யாமாரே…



Tuesday, 24 January 2017

PETA மற்றும் தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட இன்னொரு வன்மம்

PETA மற்றும்  தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட இன்னொரு வன்மம்.

சிப்பிப்பாறை என்கிற வார்த்தை நீங்க கேட்டது இல்லை என்றால் சிரமம் பார்க்காமல் இதை முழுதும் படியுங்கள் தமிழர்களே.

இது போன வருடமோ இல்லை அதற்கு முன்போ நடந்தது இல்லை. போன மாதம் DEC 16 2016 .

நம் தமிழ் இன காளைகளை போல் இன்னும் ஒரு இனம் தமிழகத்தில் தனித்துவம் பெற்றது உண்டு. அது நம் மண்ணின் நாய்கள் இனம். அதை PETA முற்றிலுமாக அழித்து விட்டது என்றே சொல்லலாம்.

நம்மை போன்ற படித்த மக்களுக்கு தெரிந்தது எல்லாம் PUG, LABRADOR, GERMAN SHEPHERD போன்ற அந்நிய நாட்டு நாய்கள் தான். இத படிக்கும் எத்தனை பேருக்கு தெரியும் நம் மண்ணின் நாய்கள் சிப்பிப்பாறை, கன்னி,  கோம்பை மற்றும்  ராஜபாளையம். நம் இன நாய்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.

சிப்பிப்பாறை - நம் முன்னோர்கள் வேட்டை ஆட பயன்படுத்துவார்கள் வீட்டிற்கு சிறந்த காவலன். Hare என்கிற முயலை விட வேகமாக ஓட கூடியது. மனிதர்களுடன் நேசம் பழகுவது இதற்கு மிகவும்
 பிடிக்கும். https://en.wikipedia.org/wiki/Chippiparai

கன்னி - இது உரிமையாளருக்கு மிகவும் உண்மையாக இருக்கும். சுயமாக சிந்திக்க கூடிய திறன் படைத்தது. ஆகையால் பழகுவது மிகவும் எளிது. முன்பு பெண் வீட்டார் பெண்ணுக்கு சீதனமாக கன்னியை பரிசளிப்பார்கள். https://en.wikipedia.org/wiki/Kanni

கோம்பை - பண்ணை காவலன். தனி ஒருவனாக காவல் காப்பார் இவர். இவரை மீறி எந்த மிருகமும் கிட்ட நெருங்க முடியாது. காட்டுஎருமையை வேட்டையாடும் திறன் படைத்தவர். https://en.wikipedia.org/wiki/Combai

ராஜபாளையம் - உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமானது. உரிமையாளர் தவிர வேற யாரும் தொட விடாது. 75cm உயரம் வரை வளர கூடியது. https://en.wikipedia.org/wiki/Rajapalayam_(dog)

இந்த நான்கு இனங்களும் அழிந்து போகும் தருவாயில் இருக்கிறது. இந்த இனங்களை மீட்டு எடுத்து  பாதுகாக்கவும், அழிவை தடுக்கவும் தமிழ்நாடு அரசு "நாய் வளர்ப்பு பிரிவு" சைதாப்பேட்டை யில் இயங்கி வந்தது. இவர்கள் நம் இன நாய்களை இனவிருத்தி செய்து அழியாமல் பாதுகாத்து வந்தனர். யார் வேண்டுமானாலும் இங்கு சென்று நம் இன நாய்களை வாங்கி வளர்க்கலாம்.

PETA 4th Aug 2014 தமிழ்நாடு உயர் நீதி மன்றத்தில் இந்த நாய் வளர்ப்பு கூடத்தில் நாய்கள் கொடுமைப்படுத்த படுகிறது. ஆதலால் இக்கூடத்தை AWBI ஆய்வு செய்து அவரகள் பரிந்துஉரைத்தால் இக்கூடத்தை மூட வேண்டும் என்று மனு செய்கிறது. இதற்கு மேல் என்ன நடந்தது என்று உங்களால் ஊகிக்க முடியும். PETA கைப்பாவை AWBI ஆய்வு செய்து "நாய் வளர்ப்பு கூடத்தை " மூட பரிந்துஉரைத்தது. அதன்படி உயர் நீதி மன்றம் Dec 16 2016 அன்று நம் இன நாய் வளர்ப்பு கூடத்தை மூட உத்தரவிட்டது. PETA அமைப்பு அங்கு நாய்கள்  கொடுமைப்படுத்த படுகிறது என்று உயர் நீதி மன்றத்தில் கொடுத்த ஆதாரம் இதுதான்.

https://www.youtube.com/watch?v=PTmlijd2IZM

இதை பார்த்து விட்டு சொல்லுங்கள் இதில் எங்கே நாய்களை கொடுமைப்படுத்துகிறார்கள்?

ஏன் இதை எந்த தமிழ் மீடியாவும் நமக்கு சொல்லவில்லை?

வெறும் சில நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சனைக்கு எதற்காக உயர் நீதி மன்றம் முற்றிலுமாக மூட சொல்லியது?

PETA  எதற்காக இந்த நாய் வளர்ப்பு கூடம் மூட இவ்வளவு சிரத்தை எடுத்தது?

பலபேர் யோசிப்போம் இதனால் PETA விற்கு என்ன லாபம் என்று. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. நம் நாட்டு நாய்களுக்கு தனியாக உணவு தேவை இல்லை. நம் சாப்பிடும் உணவே அதற்கும் போதும். எளிதாக நோய்கள் அண்டாது. முடி உதிரும் தன்மை கிடையாது. அப்புறம் எப்படி அவர்கள் சம்பாதிக்க முடியும்? வெளிநாட்டு நாய்கள் நம் உணவு சாப்பிடாது அதற்கென்று தனி உணவு சூப்பர் மார்க்கெட் ல வாங்கணும். அதை பராமரிக்க மருந்துகள் வாங்க வேண்டும். இவை அனைத்தும் வெளிநாட்டு கார்பொரேட் கம்பெனிகளால் இங்கு விற்கப்படுகிறது. இப்போது புரிந்ததா? மேலும் படியுங்கள்.

எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. PETA என்கிற வெளிநாட்டு அமைப்பின் ஒரே குறிக்கோள் நம் சொந்த மண்ணின் இனத்தை அழித்து அவர்களின் தயாரிப்புகளை நம் மண்ணில் இறக்குவது தான். இன்னும் சற்று உற்று யோசித்து பாருங்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நம் பாரம்பரிய இனங்களை அழித்தால் போதும்.

மக்களே விழித்து கொள்ளுங்கள். PETA அமைப்பு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் சரியே. அவர்கள் நம் நாட்டின் விஷம். இப்போதே அவர்களை விரட்ட வேண்டும். PETA வை ஒழிப்பது மட்டும் இன்றி நம் நாட்டு நாய்களையும் காப்பாற்ற வேண்டும்.

நான் ஆராய்ந்ததில் ஆபிரகாம் என்பவர் இந்த "நாய் வளர்ப்பு கூடத்தை" பராமரித்து வந்து இருக்கிறார். அவரை முதலில் தொடர்பு கொண்டு முழு விவரத்தையும் அறிய வேண்டும். வழக்கை மேல் முறையீடு செய்து இக்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும். தமிழரகளே நம் இனத்தின் ஒரு புள் பூண்டை கூட அழிய விடாமல் காப்பது நம் கடமை. விழித்திரு தமிழா.

இதை நம் தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

#weneedjallikattu #savetamilbreeds