Thursday 25 May 2017

பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் பயன்களும்






மாப்பிளை சம்பா :

     உடலை பலபடுத்தும் மாமருந்து .
திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.


கவுணி அரிசி :

     புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி .
இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .


சிவப்பு கவுணி அரிசி :

     புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி .
இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது .

குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .


சேலம் சன்னா :

     கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி .
குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் .
களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் .
இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .


பூங்காற் அரிசி :

     மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி .
தாய்பால் சுரக்கும் .


கட்ட சம்பா அரிசி :

    நோய் எதிர்ப்பு சக்தி தரும் .


சிங்கினி கார் அரிசி :

     எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி .
உடல் நலம் பெற உதவும் .


இலுப்பைபூ சம்பா அரிசி :

     சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து .
நரம்பு பிரச்சனையின் மருந்து .


காட்டுயானம் அரிசி :

     இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .


சூரகுருவை அரிசி :

     நோய் எதிர்ப்பு சக்தி தரும் .


பனங்காட்டு குடவாழை அரிசி :

     தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி .
அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .


கருடன் சம்பா :

     நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
சாப்பாடு மற்றும் பலகார அரிசி .


கருங்குறுவை அரிசி :

இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம்
   
 இது ஒரு மாமருந்து.
இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து .

குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து.

உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது .

இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான
மருந்து .

இது கிரியா ஊக்கியாக உள்ளது .


கார் அரிசி :
   
     சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.


தங்க சம்பா :

     இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.


தூயமல்லி அரிசி :

     மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து .
தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .
மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி .
தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .

இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது.

மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .

பாரம்பரிய அரிசி உண்போம் . உடலை வளர்ப்போம் . உயிரை காப்போம் .

( தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் 'நெல் அதிகாரம் 'என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது )


மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே



No comments:

Post a Comment