Monday 6 February 2017

3வது உலகப்போர்


மீண்டும் ஒரு போர். 3வது உலகப்போர்..
-----------_--------------------------------------------------+-+--

இரண்டு கப்பல்கள் மோதி எண்ணூரில் 40 மெட்ரிக் டன்( 4000000 லிட்) கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்துள்ளது.

பன்னாட்டு எண்ணைய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் எதுவும் இல்லாத தமிழ்நாட்டிற்கு இவ்வளவு எண்ணெய் கொண்டுவர காரணம் என்ன??

ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அதிர்ச்சி தகவல்.

கப்பல்கள் மோதியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கப்பல்கள் எந்த நாட்டை சேர்ந்தது. எதற்காக இங்கு வந்தது , எப்படி விபத்து ஏற்ப்பட்டது. விபத்திற்கு காரணம் யார்.. அந்த கப்பல்களின் கேப்டன், துறைமுக மேலாளர் என எந்த செய்தியும் யாருக்கும் தெரியாது.

கடலில் எண்ணைய் சிந்திவிட்டால் அதனை 22 மணி நேரத்தில் ஊறிஞ்சு மோட்டார் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அது இறுகிக்கொண்டு உறிஞ்ச முடியாத அளவிற்கு திட நிலையை அடையும். இது அங்கிருக்கும் துறைமுக அதிகாரிகளுக்கு தெரியாதா?? தெரிந்தும் ஏன் துரித நடவடிக்கை எடுக்கவில்லை??..

7 நாட்களுக்கு பிறகும் இன்னும் வாளிகள் கொண்டு அள்ளும் நிலை ஏன்.

இந்த பணியில் அரசு துப்புறவு தொழிலாளர்களையோ மற்ற தொழிலாளர்களையோ ஈடுபடுத்தாமல் பொதுமக்கள் ,மாணவர்கள் ,மீனவர்கள் , மற்றும் தீயணைப்பு வீரர்கள் மட்டும் அரசு ஈடுபடுத்துவதில் உள்ள சூது தெரியாமல் இல்லை..

ஹைட்ரஜன் சல்பைட் எனும் நச்சுள்ள இந்த கழிவுகள் மிகவும் ஆபத்தானது. சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோயை உருவாக்குவவது..

ஐந்து முக்கிய உண்மைகள் நம் கண் முன்னே மறைக்கப்படுகிறது...

1. எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் அதன் கழிவுகளை இங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் உதவியுடன் கொட்டி விட்டு சென்று விட்டனர்.

2. 75 கி.மீ பரப்பளவிற்கு 40 மெட்ரிக் டன் கழிவுகள் பரவியுள்ளதால் , இன்னும் பல ஆண்டுகளுக்கு இங்கு கடல் வளங்கள் அனைத்தும் ஆபத்தான கதிர்வீச்சும் நச்சுத்தன்மை கொண்டதாகவும் மாறிவிட்டது.

3. தற்போது இதன் பாதிப்பு புதுச்சேரி வரை பரவுகிறது. இதே மெத்தன போக்கை அரசு கடைபிடித்தால் இன்னும் சில நாட்களில் இந்த நச்சுத்தன்மை தமிழக கடற்கரை மொத்தமும் பரவும்..  மீன் வளம், மீனவர் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

4.  தன்னார்வலர்களாக அங்கு எண்ணையை சுத்தம் செய்யும் அனைவருக்கும் (irritation of the nose, throat and lungs.. , nausea, dizziness,drowsiness, fatigue, cancer,. Chronic exposure can result in irregular heartbeats, convulsions and coma) (இணையதள தகவல்) இது போன்ற ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

5. தமிழ்நாட்டின் தற்சார்பு பொருளாதரமான கடல்வளி பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கும் இன்னும் ஒரு அறிவியல் போர் இது..

சிந்தியுங்கள்.. ஆராயுங்கள்.. பகிருங்கள்.. விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. அதன் மூலமே அரசிற்கு அழுத்தம் தர இயலும்..

ஊடகங்கள் (news7 தவிர) இதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்..

நன்றி.


No comments:

Post a Comment