Tuesday 14 February 2017

வாட்ஸ் அப் வைரல்



யார் ஆட்சிக்கு வந்தால் என்ன...?
***************************

கருணாநிதி மற்றும் அம்மையார் ஆட்சி செய்தபோதும் சரி, இனி வரப்போகும் காலங்களில்...
பன்னீர்.. சசிகலா..  ஸ்டாலின்.. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி...

தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படுமா...?
- வாய்ப்பே இல்லை...

தகுதியுள்ளவர்களுக்கே அரசு வேலை என்ற நிலை வருமா..?
- வரவே வராது.

அரசு மணல் வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வது தடுத்து நிறுத்தப்படுமா...?
- வாய்ப்பே இல்லை..

எந்த வேலை செய்வதாக இருந்தாலும் லஞ்சம் வாங்கும் மனோ நிலை மாறுமா..?
- மாறவே மாறாது.

வேளாண்மையை வளப்படுத்தும் சிறப்புத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா...?
- சாத்தியமே இல்லை..

பட்டதாரிகளுக்கு நிச்சயம் அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா...?
- அளிக்கவே அளிக்காது.

மது விலக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா...
- படவே படாது..

தனியார் பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வருவதற்கான வாய்ப்புகள் வருமா...?
- வரவே வராது.

ஆண்டுக்கு ஓர் அணைக் கட்டும் திட்டம் என்பது சாத்தியம் ஆகுமா...?
- ஆகவே ஆகாது.

தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகள் அனைத்தின் செயல்பாடுகளும் அரசால் தீவிரமாக கண்காணிக்கப்படுமா..?
- வாய்ப்பே இல்லை..

ஒரு நாட்டில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு இந்த மூன்றும் எல்லா தரப்பு மக்களுக்கும் சமமாக கிடைத்துவிட்டாலே... நாம் வளம் பெற்றுவிடுவோம்.  ஆனால் இது நடக்குமா...?

மேலே சொன்ன எந்த ஒன்றையும், எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்தாலும் செய்யப்போவதில்லை.

அப்படியிருக்கும்போது பன்னீர் ஆண்டால் என்ன? சசி ஆண்டால் என்ன..? ஸ்டாலின் ஆண்டால் என்ன...? எந்த ** ஆண்டால் என்ன...?

ஏமாறப்போவது மாண்புமிகு வாக்காளர்கள்தான்..

பிறகு என்ன... போய் பிள்ளைங்கள படிக்க வச்சு... பொழைப்பை பார்க்கிற வழியைப் பாருங்க....

அதைவிட்டுட்டு.. சோறு தண்ணியில்லாம... பொழுதடைய  ஆளுநர் என்ன சொல்லப்போறார்.. ஆட்டுக்குட்டி என்ன சொல்லப்போகுதுன்னு...
மீண்டும் முட்டாள்களாக நாமே !!!

No comments:

Post a Comment