Thursday 2 March 2017

கோவிலில் மறைந்து இருக்கும் உண்மைகள்




இந்தியாவில் லட்சக்கணக்கானகோவில்கள் உண்டு. ஆனால்அவையனைத்தும் வேத வழியில்கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லைஎன்றுதான் சொல்லவேண்டும். கோவில்கள் எங்கு பூமியின்காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோஅங்கு கட்டப்பட வேண்டும். அதுகிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோஎங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.பூமியின் வட தென் துருவ காந்த அலைஎங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்படவேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமானகர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்தஅலை அதிகமாக இருக்கும். சரியாகச்சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில்சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின்அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில்தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கிபுதைக்கப்படும்.இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால்காந்த அலைகளை அது சுற்றிலும்பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்துகோவிலுக்கு சென்று சிலையைவலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின்காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல்அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும்.இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழிவகுக்கும். இது அறிவியல் பூர்வமானஉண்மை.
மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும்மூடப்பட்டுள்ளதால் ஆற்றலைஅதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும்விளக்கும் வெப்ப ஆற்றலைவெளிப்படுத்தும். மணியோசைபக்தர்களின் மனதினை அலைபாயவிடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இதுமன அழுத்தினைக் குறைக்கும்.
மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமானநல்ல ஆராவை (Aura – ஒருவரைச்சுற்றியுள்ள மனித காந்த சக்தி)வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளைகற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச்சேர்த்து கழுவி அந்த நீரைதீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிகஅதிகமான காந்தசக்தியுள்ளது.அத்தீர்த்தத்தினை தாமிரப்பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இதுபற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும்வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது.இதன் மூலம் நமது முன்னோர்கள் பலநோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்
மேலும் தீபாரதனை காட்டும் போது மிகஅதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான்ஆண்களை சட்டையில்லாமலும்பெண்களை அதிக அணிகலன்களோடும்கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்தகோயில்களையும்,அதில் தெய்வதிருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும்முறைகளை வகுத்து கொடுத்து கோயில்திசை நான்கிலும் விண்ணை முட்டும்பெரிய கோபுரங்களை நிர்மாணித்துஅவற்றின் சக்தியால் உயிர்கள் நல்லமுறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்திகொடுத்தார்கள்.கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம். ஆலயம்  தொழுவது சாலவும்நன்றே என்ற முன்னோர்களின் பொன்மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.ஆகம விதிப்படி கோயில்நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம்தவறாது  கும்பாபிஷேகம் செய்யப்பட்டுவழிபாடு நடந்து கொண்டிருக்கிறகோயில்களில் உள்ள கோபுரங்களின்  மேல்தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்டகலசங்கள் தனது கூரிய முனை வழியாகஆகாயத்தில்  உள்ள உயிர் சக்தி என்றுஅழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்துவெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல்பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு,உள்ளத் தூய்மை,  ஆன்மீக  ஈர்ப்பு,நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்திஅடைகிறோம்.இதனால் தான் கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்று முன்னோர்கள் கூறினர்.கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல்வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல்பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர்கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாதுஅனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்திபீடத்தின் அடியில் உள்ளதங்கத்தாலும்,வெள்ளியினாலும்செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள்,யந்திரங்கள் தன்பால் இழுத்து தான்அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்பபீடத்தின் மேல் தன் சக்தியைவெளிப்படுத்துகிறது.சில குறியீடுகளும், யந்திர தகடுகளும்,இந்த சக்தியை முழுவதும் ஈர்த்துவிடுகின்றன.இந்த பிராண சக்தியின் அளவை மேலைநாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டுபிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும்சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில்உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது.எனவே தான் பீடத்தின் மேல்அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைஅந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள்வழியாக வெளியேற செய்கிறது.அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில்வழியாக வெளியே வருகிறது. அங்குஇறைவனை வணங்கி கொண்டுள்ள நம்மீது படுகிறது. அப்போது தீப ஆராதனைகாட்டப்படும்போது , அந்த சக்திதூண்டப்பட்டு – கைகளை இணைத்து ,மேலே உயர்த்தி வணங்கும்போது – கைவிரல்கள் வழியே அந்த சக்தி நம்உடம்புக்குள் ஊடுருவுகிறது.இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீதுபரவி மனதில் உள்ள கவலைகள்,குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல்நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்குதிசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர்துவாரம்  அமைக்கப்பட்டுள்ளது.இந்ததுவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும்கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவதொட்டியில் விழும் நீரை கோயிலை வலம்வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன்எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக்கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம்மீதும் பிராணசக்தி பரவுகிறது.


இந்தபிராணசக்தி வெளிப்பட்டு கொண்டுஇருப்பதால் தான் சிலையின் குறுக்கேசெல்லக்கூடாது.சிலையின் பக்கவாட்டில் தான் செல்லவேண்டும். சிலையை விட்டு விலகிநிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போதுகைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது.ஒரு காலை வெளியிலும், மறு காலைகர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும்வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள்இரும்பாலான எந்த பொருளையும்பயன்படுத்த கூடாது என முன்னோர்கள்விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான்கூறியுள்ளனர்

No comments:

Post a Comment