Monday 6 March 2017

ஆண்மகனின் பேறுகாலம்


காலை அலுவலகம் செல்கையில்:

 எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க.

இரவு 2 மணி:
 அவர்: ஒரு வேலை உண்டாயிருந்தா என்ன பண்றது?
 அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க.

விடியற்காலை 5 மணி:
 அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு.

5:10 மணி:
 அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க.
 அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்.
 அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். :D

2 ஆம் மாதம்:
 அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா?
 எனக்கு பயங்கரமா தலை சுத்துது.
 எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.
 இடுப்பெல்லாம் வலிக்குது.
  அவர்: நீ rest எடு. நான் பாத்துக்கிறேன்.

3 ஆம் மாதம்:
 அவள்: மருத்துவமனைக்கு கூட வருவ தானே?
 அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.
 அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.
 நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?
 அவர்: இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?
 அவள்: கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. :(
 அவர்: சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம்.
 அவள்: அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ.

4 ஆம் மாதம்:
 இரவு 3 மணி:
 அவள்: எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?
 அவர்: (தூக்க கலக்கத்தில்) போறேன்.
 வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .
 அவள்: :O

5 ஆம் மாதம்:
 அவள்: கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.
 அவர்: பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.
  அவள்: என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா  அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு  இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற?

6 ஆம் மாதம்:
 அவள்: முக்கி முனகி எந்திரிக்க முனைகையில்
 அவர்: என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.
 அவள்: யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில.
 அவர்: இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம்.
 அவள்: (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன்.

7 ஆம் மாதம்:
 அவர்: பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.
 அவள்: எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க?
 அவர்: பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?
  அவள்: நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு  என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன்.  எனக்கு எங்க அம்மா வேணும்.
 அவர்: சரி. நான் போறேன். உன்ன பாக்கல.
  அவள்: ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி  என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன  பாக்காத.

8 ஆம் மாதம்:
 நடுஇரவில்:
 அவள்: ஏன் தூங்குற?
 அவர்: இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?
  அவள்: ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும்  அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட  தான்.
 அவர்: சரி. நான் திரும்பியே படுத்துகிறேன்.

 9 ஆம் மாதம்:
 அவள்: ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.
 அவர்: பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.
  அவள்: நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான  வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும்  போது, "push, push" னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன்.
 அவர்: சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.
 அவள்: ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.
 அவர்: கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ.

10 ஆம் மாதம்:
 அவள்: என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடு. இதுக்கு மேல முடியாது.
 அவர்: கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான்.

கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும்  அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும்  வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த முழித்து ,  அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என  நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை  அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, " கொசு கடித்தாலே  கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ " என பயந்து, வலி வந்தவுடன் ,  தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே  பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே  வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன்  சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை  பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன்,  வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில்  இருக்கிறது "ஆண்களின் பேறுகாலம்" .

பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான்.

பெண்கள் பேறுகாலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.. 💝💝💝

No comments:

Post a Comment